Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புறநகர் ரயில் சேவை தொடக்கம்? ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவு!

புறநகர் ரயில் சேவை தொடக்கம்? ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவு!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:16 IST)
சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது.  ஆனால், சென்னையில் லோகல் டிரைன் (புறநகர் ரயில் சேவை ) இல்லாதது பெரும் கவலையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் இப்போது புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. ஊழியர்களைப் பணிக்கு திரும்ப சொல்லி ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அடுத்தமாதம் 7 ஆம் தேதியில் இருந்து புறகர் ரயில்சேவை தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த நடிகர் இரண்டு படத்தை இயக்கியுள்ளாரா? யாருக்கும் தெரியாத தகவல்!