Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் வழக்கம் போல ரயில்கள் இயங்கும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

metro
, வெள்ளி, 3 மார்ச் 2023 (20:04 IST)
நாளை காலை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இன்று காலை திடீரென சென்னை மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் சுரங்க பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
 
 இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு இரவு பகலாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இரவுக்குள் கோளாறு செய்யப்பட்டு நாளை காலை முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளத்.
 
சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோ ரயில் ஒருநாள் இயங்கவில்லை என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: அமைச்சர் சி.வெ.கணேசன்