Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
, வியாழன், 7 ஜனவரி 2021 (08:49 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதால் வரும் ஆண்டு கோடையில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது திடீரென மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது 
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்த அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!