Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி
, வியாழன், 7 ஜனவரி 2021 (07:27 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது 
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்ததுதான் என்பதும் இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்காததன் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் உயர்ந்துள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோலின் விலை என்பது 86.96 ரூபாயாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 79.72 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகளும்,டீசல் விலையை லிட்டருக்கு 26 காசுகளும் இன்று உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 கோடியை நெருங்குகிறது உலக கொரோனா பாதிப்பு!