Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா உணவகத்தில் இலவச உணவு – முதல்வர்!

அம்மா உணவகத்தில் இலவச உணவு  – முதல்வர்!
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:44 IST)
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.  
 
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து முதல்வர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பருமழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும்- வானிலை மையம்