Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 17 ஏப்ரல் 2025 (18:59 IST)
திருவிழா நடைபெறும் நாட்களில் 10 கோவில்களில் முற்றிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்ற போது, அமைச்சர் சேகர்பாபு புதிய சில அறிவிப்புகளை வெளியிட்டுவார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், முதல் கட்டமாக 10 கோயில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாத பௌர்ணமி, பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாள் ஆகிய நாட்களில் கட்டண தரிசனம் ரத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருநாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments