புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

Siva
புதன், 15 அக்டோபர் 2025 (13:25 IST)
தைவானை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் இந்திய தலைவர் ராபர்ட் வூ, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை சந்தித்தார்.
 
சந்திப்புக்கு பின் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்து, 14,000 வேலைவாய்ப்புகளை உறுதி அளித்துள்ளது" என்று அறிவித்தார்.
 
ஆனால், இதற்கு பதிலளித்த பாக்ஸ்கான் தரப்பு, "முதல்வர் சந்திப்பின்போது புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை" என்று கூறியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த முரண்பட்ட தகவலால் முதலீட்டின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
 
இது குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அதிகாரி ஒருவர், "பாக்ஸ்கான் சில மாதங்களுக்கு முன்பே ரூ. 15,000 கோடி முதலீட்டை உறுதியளித்தது. ரகசியம் காக்குமாறு நிறுவனம் கேட்டதால் தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது நிறுவனம் மறுத்தாலும், முதலீடு உறுதியானது" என்று தெரிவித்தார். 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments