ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

Siva
புதன், 15 அக்டோபர் 2025 (13:20 IST)
கரூர் துயரச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
 
அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், கரூர் துயர சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும்.
 
நெரிசலை காரணம் காட்டி அதே வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது ஏன்? 
 
விபத்தில் இறந்த 39 பேரின் உடல்களுக்கும் ஒரே இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? எதற்காக இந்த அவசரம் காட்டப்பட்டது? 
 
சட்டப்பேரவை மரபுப்படி, எதிர்க்கட்சியினர் பேசிய பின்னரே முதலமைச்சர் பேச வேண்டும். ஆனால், சட்டமன்றத்தில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது
 
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறிய தகவலுக்கும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி கூறிய தகவலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கிறது. இவ்வாறு ஈபிஎஸ் பேசினார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments