Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (07:12 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களுக்கும் இன்று விடுமுறை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் விடியவிடிய ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு