Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (07:12 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களுக்கும் இன்று விடுமுறை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் விடியவிடிய ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments