Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

Mahendran
சனி, 3 மே 2025 (11:16 IST)
தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, தற்போது கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பதவியை விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
தமக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், இல்லையெனில் கட்சியை விலகப்போகிறேன் எனவும் அவர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். “என்னால் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அதை மன்னித்துவிடுங்கள்” என்ற வரிகளும் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
 
சமீபத்தில் தருமபுரி அருகே நடைபெற்ற தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதில், இளைஞரணியின் புதிய செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, கட்சித் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
 
இதையடுத்து, இளைஞரணி செயலாளராக இருந்த நல்லதம்பிக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அதில் ஆர்வம் இல்லையெனவும், முறையாக கட்சியில் இருந்து விலக விரும்பவில்லை என்பதாலும், அந்தப் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை.. திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்..!

நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!

மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 14 தமிழக மீனவர்கள் காயம்..!

கோவா கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல். பரிதாபமாக பலியான 6 பேர்!

நாளை நடைபெறுகிறது நீட் தேர்வு.. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments