Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

Mahendran
சனி, 3 மே 2025 (11:07 IST)
ஜம்மு காஷ்மீரின் பஹல்‌காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானை நோக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராக உள்ளேன் என கர்நாடக அமைச்சர் பி.ஏஸ். சமீர் அக்மத் கானின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஹல்‌காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான நிலைமை பதற்றமாக உள்ள நிலையில், சமீர் அக்மத் கான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர், "பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாகவே இருந்தது. மோடி மற்றும் அமித் ஷா அனுமதி அளித்தால், நான் பாகிஸ்தான் சென்று, என் உடலில் தற்கொலை குண்டு கட்டிக்கொண்டு தாக்குதல் நடத்த தயார். போர் செய்வதற்காகவே போகிறேன்,"
எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாம் இந்தியர்கள், உண்மையான ஹிந்துஸ்தானிகள். பாகிஸ்தான் எப்போதும் நம்மை எதிர்த்துதான் நடந்து வந்திருக்கிறது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரையும் கொடுக்க தயார்,” என்று கூறியுள்ளார்.
 
அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் தீவிரக் கவனத்தை பெற்றுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments