Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பணம்.. பறக்கும் படையினர் பறிமுதல்..!

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (18:56 IST)
அரசு பேருந்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் பணம் மட்டுமே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லலாம் என்றும் அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்ட பேருந்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தபோது ஒரு வாலிபர் 35 லட்சம் பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது 
 
அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையில் நிலம் வாங்கி உள்ளதாகவும் நிலம் விற்பனை செய்த நபருக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறினார். இருப்பினும் அவரிடம் பணத்திற்குரிய எந்த ஆவணங்களும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பணத்தை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கல்வித்துறை கலைப்பு.. மாகாணங்களிடம் முழுமையாக ஒப்படைப்பு: டிரம்ப் உத்தரவு..!

காதல் திருமணத்தால் மிரட்டால்.. மாலை மாற்றிய கையோடு போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள்..!

3,274 அரசு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்! - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு: கடலூர் அருகே பரபரப்பு.!

புகழ்பெற்ற Naruto, OnePiece அனிமேஷன் இயக்குனர் காலமானார்! - ரசிகர்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments