மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

Prasanth Karthick
புதன், 2 ஏப்ரல் 2025 (08:34 IST)

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களது உடமைகளை பறிபோவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

இதை கருத்தில் கொண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திரும்ப பெற்று கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments