Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவில்பட்டி முன்னாள் எம் எல் ஏ காலமானார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வருத்தம்!

கோவில்பட்டி முன்னாள் எம் எல் ஏ காலமானார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வருத்தம்!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:26 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் எம் எல் ஏ அய்யலுசாமி வயது மூப்புக் காரணமாக மறைந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அய்யலுசாமி, நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர் , பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும் 1996 முதல் 2001 ஆகிய ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதிக்கு எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் அதிகாலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென கரையை கடக்கும் காற்றழுத்த மண்டலம்! – வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!