Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீரென கரையை கடக்கும் காற்றழுத்த மண்டலம்! – வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

திடீரென கரையை கடக்கும் காற்றழுத்த மண்டலம்! – வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:11 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் முன்னரே கரையை கடக்க இருப்பதால் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கியுள்ள நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒடிசா அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இந்நிலையில் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால் இன்று நண்பகல் நேரத்தில் மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மிசோரம், அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

69 லட்சத்தை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை! – மெல்ல மீளும் இந்தியா!