Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு பள்ளிகளுக்கு தடையில்லா மின்சாரம்! – மின்வாரியம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (09:32 IST)
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் முழுவீச்சாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது மின்சார வாரியம் மின்பகிர்மான கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மின்தடை ஏற்படாதவாறு தங்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக முன்னதாகவே பள்ளிகளுக்கு செல்லும் மின் இணைப்பு வழிகளை ஆய்வு செய்தல், அப்பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை சோதித்தல், பழுது ஏற்பட்டால் சரிசெய்ய முன்கூட்டியே தயாராக இருத்தல், மாற்று வழிகளை தயார் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments