Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய போர்மேன் கைது

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:55 IST)
கரூரில் பட்டா நிலத்தின் மீது மின்சார கம்பிகள் செல்வதை மாற்றியமைக்க ரூ.3,500 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய போர்மேன் கைது            
 

கரூர் மாவட்டம் காதப்பாறை சேர்ந்தவர் செந்தில்குமார் இவருடைய பட்டா நிலத்தின் மீது மின்கம்பிகள் செல்வதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்தை அணுகினார் அங்கு பணியில் இருந்த போர் மேன் குணசேகரன் 53 என்பவர் செந்தில்குமார் பட்டா நிலத்தின் மீது செல்லும் மின் கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டுமானால் ரூபாய் 3500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில் செந்தில்குமார் இன்று மின்வாரிய அலுவலகத்தில் ரசாயன பவுடர் தடவிய 3500 ரூபாயை குணசேகரனிடம் கொடுத்தார்.       

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் போலீசார் குணசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் லஞ்சப் பணம் 3500யை பறிமுதல் செய்து உள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments