Publish Date: Sat, 30 Jul 2022 (14:06 IST)
Updated Date: Sat, 30 Jul 2022 (14:08 IST)
தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து வருகின்றது
இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தற்போது வரை ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.