மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தரமான பொங்கல் பரிசு உண்டு: எடப்பாடி பழனிசாமி

Mahendran
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (13:18 IST)
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க.வின் அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில், குறிப்பாக தாய்மார்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அ.தி.மு.க. ஆட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஏழைகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டித்தரும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்படும் திட்டமும் இருந்தது” என்று குறிப்பிட்டார்.
 
இந்தத் திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டதாகவும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அம்மா கிளினிக் உள்ளிட்ட அனைத்து நிறுத்தப்பட்ட திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தரமான மற்றும் முழுமையான பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புகளில் உள்ள குறைகள் தவிர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இன்னும் பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments