Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் 3வது மொழி: மோடிக்கு போட்ட டிவிட்டை நீக்கிய எடப்பாடி!!

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (16:05 IST)
தமிழை மற்ற மாநிலங்களின் 3வது மொழியாக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு போட்ட டிவிட்டை முதல்வர் நீக்கியுள்ளார். 
 
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிரமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என குறிப்பிட்டிருந்தார். 
 
ஆனால், தற்போது மோடிக்கு கோரிக்கையாக வைத்த அந்த டிவிட்டை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments