Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியைக் கலைக்க திட்டமா ?... வருகிறது ரெய்டு – எடப்பாடியின் மாஸ்டர் பிளான் !

ஆட்சியைக் கலைக்க திட்டமா ?... வருகிறது ரெய்டு – எடப்பாடியின் மாஸ்டர் பிளான் !
, செவ்வாய், 4 ஜூன் 2019 (13:16 IST)
தமிழகத்தில் தனது ஆட்சியைக் கலைக்க திட்டம் நடந்துவருவதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இமாலய வெற்றி பெற்றுள்ளது திமுகவுக்கு இருக்கும் ஆதரவைக் காட்டியுள்ளது. அதேபோல இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை வென்றுள்ளது. இதனால் திமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அதிமுக எதிர்ப்பு மனநிலையில் தான் உள்ளனர்.. மேலும் கருணாஸும் அதிமுக வுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். அதனால் மொத்தமாக 119 பேர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை. இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து இழுக்க திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

இதற்காக திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ரகசியமாக சில அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக பெரியத் தொகை ஒன்று திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் திமுக  வின் பணபுழக்கத்தைத் தடுக்க முன்பு ரெய்டுகளை நடத்தியது போல இப்போதும் ரெய்டுகள் நடத்தவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் விரைவில் திமுக உறுப்பினர்கள் சிலர் வீடுகளில் விரைவில் ரெய்டு நடக்கலாம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்கமா இல்ல... அடிச்சு பிரச்சனை ஆனதும் ராக்கியா? கஸ்தூரி டிவிட்!