Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிண அரசியல் பழனிச்சாமி: ஆளும் அரசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

#பிணஅரசியல்பழனிச்சாமி
Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (12:48 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பிணஅரசியல்பழனிச்சாமி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை விடுபட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, நிகழ்ந்த மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இவை வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த 444 இறப்புகளையும் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, விடுபட்ட 444 மரணங்களுக்கு கொரோனாவால் நிகழ்ந்தவையாக கருதி, அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். எனவே தமிழகத்தில் மொத்த மரண எண்ணிக்கை 3,144 ஆக உள்ளது. இது தற்போது பூதாகாரமாய் வெடித்துள்ளது. 
 
மரணங்கள் மறைக்கப்பட்டதாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை மக்கள் மத்தியிலும் பீதியையும் ஆதங்கத்தையும் எழுப்பியுள்ளது. இதனால் #பிணஅரசியல்பழனிச்சாமி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அரசை விமர்சித்து வருகின்றனர் இணையவாசிகள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments