Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோவில் பணிகள் தொடங்கும்போது கொரோனா முடியும்! – பாஜக தலைவர் கருத்து!

ராமர் கோவில் பணிகள் தொடங்கும்போது கொரோனா முடியும்! – பாஜக தலைவர் கருத்து!
, வியாழன், 23 ஜூலை 2020 (12:46 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும்போது முடியும் என மத்திய பிரதேச பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளன. இதுவரையிலும் அதிக பாதிப்புகளை கண்டு வந்த தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலைமை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்டு 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. ராமர் கோவில் கருவறையில் வெள்ளி செங்கல் பொருத்துவதற்காக இந்திய தங்க சங்கம் கிலோ கணக்கில் வெள்ளியை நன்கொடையாக அளித்துள்ளது. ஆகஸ்டு 5ல் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் பணிகள் குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச பாஜக தலைவர் ராமேஸ்வர சர்மா “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டவுடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையும். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், புனித நபர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது வெறும் டீசர் தான்.. டிக்டாக்-கிற்கு மூடு விழா நடத்திய அமெரிக்கா!