Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ ராசா விவாதத்திற்கு கூப்பிட்டா நான் போகணுமா? – எடப்பாடியார் ஆவேசம்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:02 IST)
அதிமுக குறித்து திமுகவின் ஆ.ராசா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவர் விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை பார்வையிட்டார்.

பிறகு வேளாண் மசோதா குறித்து பேசிய அவர் “விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் அதிகமாக இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விருப்பப்பட்டால் மட்டுமே விவசாயிகள் வேளாண் சட்டத்தை பயன்படுத்தலாம்” என கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு பற்றி ஆ.ராசா பேசி வருவது குறித்து பேசிய முதல்வர் “ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் நான் போக வேண்டுமா என்ன? சாதாரண ஆள் அவர்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments