Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது- துரை வைகோ தகவல்

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (18:20 IST)
மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில்,  6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளன.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்,  தங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அனைத்து கட்சிகளும் தயார்படுத்தி, தொகுதி பங்கீடுகள் பற்றி கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

இந்த  நிலையில், மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிட விரும்பும் இடங்கள் எனவை என்பது பற்றி மதிமுக தலைமை  நிலையைச் செயலாளர் துரை வைகோ இன்று பேட்டியளித்துள்ளார்.

அதில்,  மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளோம்.

விருதுநகர் அல்லது திண்டுக்கல் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மதிமுகனவினர் விரும்புகின்றனர். தனிச்சின்னத்தில் போட்டியிடவும் கட்சியினர் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments