Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MYV3 ads மோசடி விவகாரம்: 5,000 பேர் மீது வழக்குப் பதிவு!

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (18:07 IST)
மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வாட்ஸப் செயலி மூலம் வலுக்கட்டாயமாக  ஒன்று சேர்த்து நேற்று கூட்டம் கூட்டியினர். இதுதொடர்பாக   5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி பல ஆயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி கோயம்புத்தூர், நீலாம்பூர் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம்பேரை வலுக்கட்டாயமாக வாட்ஸ் ஆப் மூலம்  திரட்டிய நிலையில்,  இந்தக் கூட்டம் கூடியதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டதாக 5ஆயிரம் பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல், உட்பட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments