Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை விட கோபக்காரரா இருக்காரே.. மகனை நினைத்து வருந்துகிறாரா வைகோ?

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:32 IST)
நான் கோபப்பட்டு உணர்ச்சிவசப்பட்டதால் தான் அரசியலில் பல நல்ல வாய்ப்புகளை இழந்தேன், ஆனால் என் மகன் என்னை விட கோபக்காரராக இருக்கிறார் என்று வைகோ தனது நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் துரை வைகோ, கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதை வைகோவே ரசிக்கவில்லை என்றும் அது மட்டும் இன்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் எல்லாம் அடிக்கடி கோபித்துக் கொண்டு காருக்குள் உட்கார்ந்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
 மேலும் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் துரை வைகோ,  பங்கேற்கவில்லை என்றும் வளரும் ஒரு அரசியல்வாதிக்கு இது அழகல்ல என்று வைகோ, சுட்டிக்காட்டியும் கூட அவர் விடாப்பிடியாக தனது இஷ்டப்படி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிகம் உணர்ச்சி வசப்பட்டதால் தான் அரசியலில் நான் நிறைய இழந்து விட்டேன், இவர் என்னை விட உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வைகோ கூறி புலம்பியதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments