Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்த ரிசல்ட் வரலைன்னா பதவி போய்விடும்.. ஈரோடு திமுகவினருக்கு பறந்த எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:26 IST)
ஈரோடு உள்பட ஆறு தொகுதிகளில் திமுக மந்தமான பிரச்சாரத்தில் இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததாகவும் இதனை அடுத்து திமுக தலைமையிடம் இருந்து எச்சரிக்கை பறந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஈரோடு, பொள்ளாச்சி, நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு தொகுதிகளில் திமுகவினர் சரியாக பணியாற்றவில்லை என்று உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததை அடுத்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆறு தொகுதிகளுக்கும் எச்சரிக்கை பறந்ததாக கூறப்படுகிறது 
 
ஆனால் எச்சரிக்கை வந்த பின்னரும் ஈரோட்டில் திமுகவினர் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதால் ஈரோடு தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த மாவட்டத்தின் நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்ய முதல்வரின் குடும்பத்தில் உள்ள முக்கிய நபர் சுற்றுப்பயணம் செய்த போது ஈரோட்டில் உள்ள நிலவரம் குறித்து அவரே நேரில் அறிந்து அதிருப்தி அடைந்தாராம். தலைவர் ரொம்ப கோபமாக இருக்கிறார், எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால் பதவி போய்விடும் என்று நேரடியாகவே திமுக நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments