Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (11:00 IST)
மதுபோதையில் இருசக்கர வாகன ஓட்டிய இளைஞர் விபத்தில் சிக்கி, தலை துண்டித்து பரிதாபமாக பலியான சம்பவம் சென்னை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்ற 24 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், குடிபோதையில் இருவரும் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், சாலை தடுப்பில் மோதி 20 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதில் கோகுல் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஐடி பொறியாளரான விஷ்ணு மற்றும் அவருடைய நண்பர் கோகுல் (24 வயது), நண்பர் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று விட்டு, அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மதுபாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதே போல், மதுபோதையில் ஈரோடு மாவட்டம் செங்கோடன்பாளையம் என்ற பகுதியில் அதிவேகமாக வந்த கார் வீட்டுக்குள் புகுந்ததில், காரை ஓட்டிய இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனர்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments