Publish Date: Fri, 20 Dec 2024 (14:16 IST)
Updated Date: Fri, 20 Dec 2024 (14:17 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் ஒழுங்காக வழியனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டையே வைத்துள்ளனர். கபில் தேவ் பேசும் போது “சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரான டெஸ்ட் வீரர் அஸ்வின்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி “தற்போது கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினின் ஓய்வு முடிவை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். தொடர் முடிந்ததும் அவரை ஓய்வு அறிவிக்க சொல்லியிருப்பார். ஏனென்றால் சிட்னி மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அவருக்குத் தெரியும். டிராவிட் அல்லது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்திருந்தாலும் அவரை பாதியிலேயே வில அனுமதித்திருக்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.