Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (10:13 IST)
டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து, டிசம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாட்களில் அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

 சபரிமலை அய்யப்பன் கோவிலில் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து, 25 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசனம் மூலம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், 25, 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மண்டல பூஜை தினத்தில் 60 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் உடனடி தரிசன பதிவு மூலம் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி.. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம்..!

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments