Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தாருக்கு இரண்டு மடங்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:53 IST)
கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து கூடுதலாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் நாமக்கல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில்  பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்  மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் உள்ளன.

தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடந்து வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1 ½ கோடி முட்டைகள் கடந்த மாதம்  21 ஆம் தேதி ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில்,  ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்வது அதிகரித்த நிலையில், தற்போது, 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில்   நாள்தோறும் 4 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments