Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை கரும்பாக நினைக்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்...

பெண்களை கரும்பாக நினைக்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்...
, திங்கள், 22 அக்டோபர் 2018 (13:27 IST)
தமிழக பா.ஜ.க தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். அவர் சிறந்த பேச்சாளரும் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளுக்கும் செய்திகளுக்கும் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.தேசிய செயலர் எச்.ராஜா. நீதிமன்றத்தையும்,காவல்துறையினரையும்,சிறுபான்மை மதத்தினரியும் அவதூராக பேசிய போது இது பற்றி கருத்து தெரிவிக்காதவர்,மற்ற அனைத்து விவகாரங்களுக்கும் தன் கருத்தை பதிவிட்டு வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன். குறிப்பாக வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து ’சந்தக் கவிஞரின் மானம் சந்தி சிரிக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் தற்போது நாட்டில் பேரலையாகிக் கொண்டிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
 
இந்த மீடூ இயக்கம் பெண்களுக்கு மத்தியில் நல்ல நம்பிக்கையை ஊட்டியுள்ளது. எல்லாதுறைகளிலும் பாலியல் புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் குறிப்பாக மீடூ புகார்களி விசாரிக்க தனி குழு அமிக்கப்படும் என கூறுயுள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.
 
மேலும் பெண்கள் சுவைக்கும் கரும்புத்தன்மையுடன் இருக்கின்றானரா? இல்லை இரும்புத்தன்மையுய்டன் இருகின்றனரா..என்பதை ஏற்ற காலம் வந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
மீடூ விவகாரத்தில் தமிழக பா.ஜ.தலைவர் தமிழிசை வரவேற்றுள்ள நிலையில் ,மத்திய இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்பு தெரிவிதுள்ளது கூறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனை பழிதீர்க்க மனைவியை கொடூரமாக கற்பழித்த காமுகர்கள்