Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதனை பூச்சாண்டிக்கு பயப்படமாட்டோம் : அசராத துரைமுருகன்

சோதனை பூச்சாண்டிக்கு பயப்படமாட்டோம்  : அசராத துரைமுருகன்
, சனி, 30 மார்ச் 2019 (09:23 IST)
தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். த் தற்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில்  சோதனை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை 8:03 தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையின் சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். 
முன்னதாக, துரைமுருகன் வீட்டிலும், அவரது கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடைபெற்றது .இந்நிலையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு,  சிபிஎஸ்இ பள்ளி,கல்லூரியில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர்.
 
இன்று காலை, காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள துரைமுருகன் கல்லூரி, பள்ளியில் தேர்தல் பறக்கும் படையும் சோதனை நடைபெற்றது. மேலும் வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும், சோதனை நடைபெற்றது.
 
தற்போது கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இரவில் இருந்து நீடிக்கும் சோதனையால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் அதிகாலை 3 மணி முதல்  நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை தற்போது 8:30 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
 
வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பதவி வகிக்கும் அக்கட்சியின்பொருளாளரான துரைமுருகன் வீட்டில் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று காலை 8:03 தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையின் சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
இந்நிலையில் இந்தச் சோதனை குறித்து துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. ஆனால் அவர்கள் ( வருமான வரித்துறையினர் ஒன்றையும் கைப்பற்றவில்லை. ஒன்றுமில்லாமல் சென்றுவிட்டனர். கடைந்தெடுத்த கழிசடைகளாக சில அரசியல்வாதிகள் உள்ளனர்.  ஐடியை விட்டு எங்கள் முதுகில் குத்துகிறார்கள்.மோடி அரசு ஐடி ஏவலைக் காட்டி எங்களை பயமுறுத்தப்பார்கிறார்கள். நாங்கள் மிசாவை பார்த்தவர்கள். இதெல்லாம் காட்டி  எங்களை பயமுறுத்த முடியாது.
 
தேர்தலிலிருந்து திசை திருப்பவே இப்படி சோதனை என்ற பெயரில் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். செல்லரித்துப்போன தத்துவத்தை மோடி  கையில் எடுத்துள்ளார்.
 
இந்த மாதிரி நடத்துகொண்ட அரசியல் வாதிகள் எத்தனையோ பேர் தோற்றுப்போயுள்ளார்கள். மேலும் திமுகவினர் இந்த சோதனை பூச்சாண்டிக் கெல்லாம் பயம்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துரைமுருகன் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையின் ரெய்டு முடிந்தது