Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த கனிமொழி.. சென்னையில் பிரமாண்ட மாநாடு..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:04 IST)
அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்திக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வரும் அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற இருப்பதாக திமுக எம்பி கனிமொழி அறிவித்துள்ளார். திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாகாந்தி, மெகபூபா முப்தி, உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கனிமொழி எம்பி ஏற்பாட்டில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சென்னை ஓஎம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே  உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments