Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆருத்ரா கோல்டு விவகாரம்: ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க முடிவு

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (14:10 IST)
ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் 15 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் அவரது சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலம் ஆகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்

இந்த மோசடியில் 800 கோடி ரூபாய் வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் பல  மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருப்பதால் அவர் சென்னை வந்தவுடன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில். ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது துபாயில் உள்ள ஆ.கே.சுரேஷை அந்த நாட்டை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments