Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10-ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.! கணிதத்தில் 20,691 மாணவர்கள் சதம்...!

Students

Senthil Velan

, வெள்ளி, 10 மே 2024 (13:45 IST)
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
 
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.
 
100 சதவீத மதிப்பெண்கள்:
 
தமிழ் -8 பேர்
ஆங்கிலம்-415 பேர்
கணிதம் -20691 பேர்
அறிவியல் -5104 பேர்
சமூக அறிவியல் - 4428 பேர்
 
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:
 
 
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%
ஆங்கிலம் -99.15%
கணிதம் -96.78%
அறிவியல்- 96.72%
சமூக அறிவியல்- 95.74%
 
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.
 
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
 
அரியலூர் -97.31
சிவகங்கை 97.02
ராமநாதபுரம்-96.36
கன்னியாகுமரி-96.24
திருச்சி-95.23
விருதுநகர்-95.14
ஈரோடு-95.08
பெரம்பலூர்-94.77
தூத்துக்குடி-94.39
விழுப்புரம்-94.11
மதுரை-94.07
கோவை-94.01
கரூர்-93.59
நாமக்கல்-93.51
தஞ்சாவூர்-93.40
திருநெல்வேலி-93.04
தென்காசி-92.69
தேனி-92.63
கடலூர்-92.63
திருவாரூர்-92.49
திருப்பூர்-92.38
திண்டுக்கல்-92.32
புதுக்கோட்டை-91.84
சேலம்-91.75
கிருஷ்ணகிரி-91.43
ஊட்டி-90.61
மயிலாடுதுறை-90.48
தர்மபுரி-90.45
நாகப்பட்டினம் -89.70
சென்னை- 88.21
திருப்பத்தூர்- 88.20
காஞ்சிபுரம்-87.75
செங்கல்பட்டு-87.38
கள்ளக்குறிச்சி-86.83
திருவள்ளூர்-86.52
திருவண்ணாமலை-86.10
ராணிப்பேட்டை-82.48
வேலூர்-82.07
காரைக்கால்-78.20
புதுச்சேரி-91.28

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்