Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடித்து விட்டு ரகளை செய்த போலீஸ்: தர்ம அடி கொடுத்த மக்கள்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:18 IST)
திண்டுக்கலில் மது அருந்தி விட்டு ரகளை செய்த போலீஸுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பணி புரிபவர் பாண்டியராஜன். காமாட்சிபுரம் பகுதியிலிருந்து மது அருந்தி விட்டு வாகனத்தில் வேகமாக வந்த பாண்டியராஜன் தவறான திசையில் வண்டியை ஓட்டி மற்றொரு பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு சுற்றியிருந்த பொதுமக்கள் பாண்டியராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மது அருந்தியிருந்த பாண்டியராஜன் மக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பாண்டியராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த சக போலீஸார் பாண்டியராஜனை மீட்டு சென்றுள்ளனர். காவலரே குடித்துவிட்டு ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments