Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரை இறங்கும்போது மூன்று துண்டுகளாக உடைந்தால் விமானம்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:59 IST)
தரை இறங்கும்போது மூன்று துண்டுகளாக உடைந்தால் விமானம்
துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பேர் படுகாயமடைந்ததாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது
 
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று தரை இறங்கியது. அந்த விமானத்தில் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் தரையிறங்கியபோது விமான நிலையத்தில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஓடுபாதை ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் அப்போது விமானம் தரையிறங்கியபோது திடீரென வழுக்கிக்கொண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த விபத்தில் 3 துண்டுகளாக விமானம் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்தான்புல் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்த 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments