Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்: தீபா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (23:41 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன



அதிமுகவை பொருத்தவரை இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பது அவர்களது தன்மானப்பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை அறுவடை செய்ய திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோடு அவர் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட தீபா இல்லை என்று தேர்தல் ஆணையம் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கும் நிலையில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறியிருப்பது நெட்டிசன்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments