Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலுக்குப் பிறகு 12 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு குறித்து முடிவு!!!

தேர்தலுக்குப் பிறகு 12 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு குறித்து முடிவு!!!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:43 IST)
தேர்தலுக்குப் பிறகு 12 ஆம் வகுப்புத் பொதுத்தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும் எனத்  தமிழகப் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது..

இந்நிலையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளதாவது:

வரும் தேர்தலுக்குப் பிறகு 12 ஆம் வகுப்புத் பொதுத்தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12 ஆம்வகுப்புத் தேர்வை ஒத்திவைப்பது குறீத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லஞ்சப் புகார்…..பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !