Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 30 நவம்பர் 2024 (15:29 IST)
வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 90 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில், முன்னதாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, இன்று மாலை புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் டிசம்பர் 2 ஆம் தேதியும் மூன்றாம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments