Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையை நெருங்கும் காற்றழுத்த மண்டலம்..! – மாலை கரையை கடக்கும்!

சென்னையை நெருங்கும் காற்றழுத்த மண்டலம்..! – மாலை கரையை கடக்கும்!
, வியாழன், 11 நவம்பர் 2021 (14:25 IST)
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வரும் நிலையில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னயிலிருந்து தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை சென்னை அருகே இது கரையை கடக்கும்போது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!!