Publish Date: Wed, 26 Sep 2018 (08:30 IST)
Updated Date: Wed, 26 Sep 2018 (08:15 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்து கடந்த 16ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கருணாஸை விசாரணை செய்ய காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வரவுள்ளதால் கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இன்று கருணாஸுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது கஸ்டடி கிடைக்குமா? என்பதை பொறுத்தே அவரது தலையெழுத்து அமையும் என கூறப்படுகிறது.