Publish Date: Wed, 29 Dec 2021 (23:15 IST)
Updated Date: Wed, 29 Dec 2021 (23:18 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,46,000 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 614 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,02, 588 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,758 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 6,654 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.