Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு : 94 பேர் நலம் பெற்றனர் – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு : 94 பேர் நலம் பெற்றனர் – சுகாதாரத்துறை அமைச்சர்
, சனி, 25 ஏப்ரல் 2020 (18:27 IST)
உலகம் முழுவதும் கொரொனா வைரஸால், சுமார் 22 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,98,114 பேர் குணமடைந்துள்ளனர். 197,667 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்,  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779 ஆகவும், குணமடைந்தவர்கள்  எண்ணிக்கையும்  5,210, ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 18,953 ஆகவும் உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க பல்வேறு நாடுகள், மற்றும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
 
இந்தியாவில்,  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779 ஆகவும், குணமடைந்தவர்கள்  எண்ணிக்கையும்  5,210, ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 18,953 ஆகவும் உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க பல்வேறு நாடுகள், மற்றும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்   தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த 6 மருத்துச்வர்கள், 1 செவிலியரும் குணமடைந்துள்ளனர்.  7 பேரும் பிளாஸ்கா சிகிச்சைக்கு உதவ தயாராக இருக்கின்றனர்  என 
என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால் லிட்டருக்கு 2.50 பைசா உயர்ந்ததா ஆவின் பால்??