Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகப் போர்களை விட மோசமானது கொரோனா வைரஸ் ! பிரதமர் மோடி

உலகப் போர்களை விட மோசமானது கொரோனா வைரஸ் ! பிரதமர் மோடி
, வியாழன், 19 மார்ச் 2020 (20:17 IST)
உலகப் போர்களை விட மோசமானது கொரோனா வைரஸ் ! பிரதமர் மோடி

 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் 168க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சர்வ தேச விமானங்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனாபாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் தற்போது பேசி வருகிறார். 












அதில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் அலுவலகத்துக்குச் செல்வதை விட வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்வது அவசியம்.
 
கொரோனா வைரஸிற்கு இதுவரை தடுப்பு மருந்தோ முன்கூட்டி தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 
 
நோய்க்கு ஆளாக  வேண்டாம் நோய்களை பரப்பவும் வேண்டாம்...  அடுத்த சில வாரங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்கள் தங்களைத் தாங்களே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
22 ஆம் தேதி ஞாயிறு காலை 7 முதல் இரவு 9 வரை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் . வைரஸ் நம்மை ஒன்று செய்யாது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதற்கு முன் திருப்பதி கோவில் எப்போது மூடப்பட்டது? புதிய தகவல்