Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி : சர்வதேச விமானங்கள் இந்தியா வர தடை !

கொரோனா எதிரொலி : சர்வதேச விமானங்கள் இந்தியா வர தடை !
, வியாழன், 19 மார்ச் 2020 (18:32 IST)
கொரோனா எதிரொலி : சர்வதேச விமானங்கள் இந்தியா வர தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
இந்நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 10 வயதிற்குட்பட்டோர் வீடிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில், விமான கட்டண சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வைரஸ் 176 நாடுகளுக்கு பரவியுள்ளது. எனவே, சர்வதேச விமானங்கள் இந்தியா வர மத்திய தடை விதித்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு