Publish Date: Fri, 01 Oct 2021 (12:02 IST)
Updated Date: Fri, 01 Oct 2021 (12:42 IST)
புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431 ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431-ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,23,800 பேர் குணமடைந்துள்ளனர்; 791 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.